அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பதவியை நிரப்புமாறு கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 105 நடுநிலைப்பள்ளிகளும், தொடக்கப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1, 2 என இரு அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1-இல் தற்சமயம் ஷகிலா என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்-2 பதவியில் இருந்த ஜெய்சங்கர் உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவருக்குப் பின் இதுவரை அந்தப் பணியிடத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. காலியாக உள்ள அப்பணியை நிரப்பாததால், பள்ளி மாணவர்களின் திறன், பள்ளிகளின் நிர்வாகப் பணிகள், ஆசிரியர்களின் பணிகள், பள்ளிகளின்ஆய்வுப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார கல்வி அலுவலர் நிலை-1 பணியில் உள்ள ஷகிலா தனது உடல்நிலை மற்றும் அவசரத் தேவைக்காக விடுப்பு எடுக்கும் காலங்களில் தமது பள்ளிகளின் தகவல்கள், விடுப்புகள், பணப்பலன் போன்ற அனைத்து பணிகளும் தொய்வு ஏற்படுகிற நிலை உள்ளது.
எனவே 8 மாதங்களாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பணியிடத்தை நிரப்பி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன்களைப் பேணுமாறு கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம்: டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அறிவுரை

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


