கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கல்: ஒருவர் கைது

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :24 ஜூலை 2018, 4:46 am IST

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்த விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சாலைத் தெருவில் ஒருவர் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், உத்தரமேரூர் போலீஸார் சாலைத் தெருவில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
இச்சோதனையில், 30 கிலோ வெடிமருந்து, 40 கிலோ பட்டாசுகள், 6 பாஸ்பரஸ் வேதிப்பொருள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
அதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் அனுமதியின்றி வெடிமருந்து மற்றும் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த காதர் மொய்தீன் (26) என்பவரைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.