செங்கல்பட்டு நகராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா திங்கள்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
நகாரட்சி அலுவலகம், வருவாய்த் துறை, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் உருவாகும் வகையில் சுகாதாரப் பணியில் குறைபாடுகளைக் கண்டறிந்தார். கொசுக்கள் உருவாகாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறித்தார்.
நகாரட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவகத்தை உள்ளடக்கிய வருவாய்த்துறை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆய்வு நடத்தினார். அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது மருத்துவமனையில் குப்பைக் கழிவுகள் அதிகம் உள்ளதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு உருவாகி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்றும் அவர் கூறினார். சுகாதாரப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள பத்மாவதி என்ற ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை ஆட்சியர் விதித்தார். மேலும், அரசு மருத்துவமனையில் செவிலியர் தங்கும் குடியிருப்புப் பகுதியல் டெங்கு தடுப்புப் பணி குறைபாடு மற்றும் சீர்கேட்டைக் கண்டறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியருடன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி, நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, சுகாதார அலுவலர், செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்து வடிவேல், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மருத்துவமனை ஆய்வின்போது மருத்துவக் கண்காணிப்பாளர் சுதாகர், டாக்டர்கள் தீனதயாளன், கந்தன்கருணை உள்ளிட்டோர் ஆட்சியருடன் இருந்தனர். அப்போது உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்குகள் தொடர்பாகப் பிடிபட்டு அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்களைக் கண்டார். அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கிராமிய காவல்துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதற்கு, கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன், அந்த வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகத் தெரிவித்தார்.
இது தவிர, காவலர் குடியிருப்புப் பகுதிகள், மாவட்ட சிறைச்சாலை ஆகியவற்றில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்கள் உள்பட செங்கல்பட்டு நகரில் முக்கிய பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!





