தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

மின் இணைப்பு கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

மின்இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 4:08 am IST


மின்இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுதாரர் சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே மலைநகரில் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறேன்.  பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை.  எங்களது மகள்கள் மின்வசதி இல்லாததால் படிக்க இயலவில்லை.  அவ்வப்போது, வீட்டுக்குள் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுகிறோம்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 15 -ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் மின்வாரியம் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டி,  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது, உதவி கோட்ட பொறியாளர் மனோகரன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாள்களில் மின் இணைப்பு வழங்குவதாக உறுதியளித்தார். 
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது மகள்களின் பள்ளிக் கல்வியை கருத்தில் கொண்டு மின் இணைப்பு உடனே வழங்க ஆட்சியர் உத்தரவிடவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.