பிப். 12-இல் அரசு ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இக்கூட்டம் பிப்.12 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில ஓய்வூதியர் இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் இருந்தால், அதற்கான முறையீட்டை மூன்று நகல்களில் மாவட்ட ஆட்சியருக்கு வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று பிப்ரவரி 12ஆம் தேதி நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com