காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு எப்போதும் போலீஸாரின் நடமாட்டம் இருப்பதோடு காவலர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பர்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் புதன்கிழமை காலையில் எஸ்.பி.அலுவலகம் முன்பு தன் கையில் வைத்திருந்த தின்னர் எனப்படும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீஸார் ரசாயனத்தை குடிக்க விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் ரசாயனத்தைக் குடித்துள்ளார். அதையடுத்து, அவரை மனநலஆலோசனை மையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!

ஹபீபி டிரைலர்!
கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு! விழா மேடையில் பினராயி விஜயன்!

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலா?
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
