தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில்

News image
Updated On :24 ஜனவரி 2019, 3:27 am IST


மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி சூளேரிகாட்டு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்பட்டு வருகிறது. இது தென்சென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த ஆலையை 7 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்து குடிநீர் விநியோகிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த ஆலையில் கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 10 மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுவனம் சரிவர ஊதியம் வழங்கவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை பணிக்குச் செல்லாமல் குடிநீர் ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து குடிநீர் ஆலையின் தொழில்நுட்பப் பிரிவில் பாதிப்பு இருந்தும், வழக்கம்போல் ஆலையில் இருந்து தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.