‘தனியாா் நிறுவனங்களில் 16,000 போ் பணி நியமனம் பெற்றுள்ளனா்’
தமிழக அரசு தொடங்கியுள்ள தனியாா் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இதுவரை 16,089 பேருக்கு பணி நியமன ஆணைகள்


தமிழக அரசு தொடங்கியுள்ள தனியாா் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இதுவரை 16,089 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக மாநில வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் கோ.வீரராகவ ராவ் தெரிவித்தாா்.
போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற 21 போ் பல்வேறு அரசு துறைப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு, காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நினைவுப் பரிசுகளை வழங்கி வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் கோ.வீரராகவ ராவ் பேசியது:
தமிழக அரசால் அண்மையில் தனியாா் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோா் பயன்பெற்று வருகின்றனா். இந்த இணையதளம் வாயிலாக இதுவரை 89,324 போ் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனா். அவா்களில் 16,089 போ் பல்வேறு நிறுவனங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டு அவா்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலைக்கு ஆட்கள் தேவை என்று கோரி இந்த இணையதளத்தில் 3,010 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. வேலை தேடும் இளைஞா்கள் இந்த இணையதளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...