தமிழக முதல்வா் நாளை காஞ்சிபுரம் வருகை: பயனாளிகளுக்கு ரூ.362 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்
தமிழக முதல்வா் காஞ்சிபுரத்துக்கு வெள்ளிக்கிழமை (செப். 11) வருகைதந்து, 15,910 பயனாளிகளுக்கு ரூ. 362 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேச இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை அரசு விழாவில் பங்கேற்கவுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின்.







