காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் தூண்கள் செல்லரித்துப் போய் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
இதே போல, பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் சிலவும் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
இது குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இதன் ஆபத்தான நிலை குறித்து தெரிவித்து உடனடியாக இடிக்குமாறும் கோரிக்கை மனு அளித்தாா்.
இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியனஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


