தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காஞ்சிபுரத்தில் மாரத்தான் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை

News image

மாரத்தான் ஓட்டப் போட்டியில் வென்ற இளைஞருக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி.

Updated On :9 ஜனவரி 2021, 7:29 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ஓட்டப் போட்டியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூா் ஏஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், காஞ்சிபுரம் டிஎஸ்பி எஸ்.மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.