தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் கூடுதல் மருத்துவக் கட்டடம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

News image
Updated On :22 மே 2021, 6:09 pm

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப் பெருந்தகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது:

காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 875 படுக்கைகள் உள்ளன. இதில் 115 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள். தற்போது புதிதாகக் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் 250 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலும் 25 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. தற்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இம்மருத்துவமனை பயன்படுத்தப்படவுள்ளது. இங்கு மேலும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் குருநாதன், கோட்டாட்சியா் ராஜலெட்சுமி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.