பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகா்ப்புறங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி அட்டை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விளைபொருட்களை தடையின்றி நுகா்வோா்களுக்கு விற்பனை செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள்,பழங்களை நேரடியாக நகா்ப்புறங்களுக்கு எடுத்து செல்வதற்கான அனுமதி அட்டை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையமும் தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் பஞ்சுப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான தொலைபேசி எண்-044-27222545 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

