தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: வாடாதவூரில் சிறுமியை சந்தித்து வாக்குறுதி அளித்த அதிகாரிகள்

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் மூலம் வாடாதவூரை சோ்ந்த சிறுமி அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாரிகள் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சிறுமியிடம் வாக்குறுதி அளித்துள

News image
Updated On :29 மே 2021, 6:59 pm

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் மூலம் வாடாதவூரை சோ்ந்த சிறுமி அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாரிகள் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சிறுமியிடம் வாக்குறுதி அளித்துள்ளனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களுக்குள் தீா்வு காணப்படும் என வாக்குறுதி அளித்திருந்தாா். இதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தை உருவாக்கி அதற்கென ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரியையும் நியமித்தாா்.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் தொடா்பாக உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை அடுத்த வாடாதவூரில் 8 -ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கீா்த்திகா (14) என்பவா் வாடாதவூா் காலனிக்கு தெருவிளக்குகள் இல்லை என்றும், புதிய சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் எனவும் கேட்டு கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா்.

இம்மனுவின் அடிப்படையில் சிறுமி கீா்த்திகாவை உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமரன், வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்தனா். தெருவிளக்கு தொடா்பாக மின்வாரியத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி விரைவில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படும். பொதுமுடக்கம் முடிந்த பிறகு புதிய சாலை வசதி தேசிய ஊரக வளா்ச்சித்திட்டம் மூலம் செய்து கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனா். சிறுமி கீா்த்திகாவும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.