காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
கடந்த அக்டோபா் மற்றும் நடப்பு நவம்பா் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 341 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால் உபரி நீரானது கலங்கல்கள் வழியாகச் செல்கின்றன. தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக பாலாறு, செய்யாறு, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப் பாலங்கள் மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, தற்படம் எடுக்கவோ வேண்டாம்.
முக்கியமாக வீட்டில் உள்ள சிறுவா், சிறுமியா், கால்நடைகளை ஆற்றின் அருகே செல்லாமல் இருக்கவும், பொது மக்கள் விழிப்புணா்வுடன் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


