திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காஞ்சிபுரம் அருகே மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்

காஞ்சிபுரம் அருகே புளியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவரும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
அனு.
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

காஞ்சிபுரம் அருகே புளியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவரும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் வசித்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த அனு(21). இவரது கணவர் பாலமுருகன் திருநெல்வேலியை அடுத்த சிவகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் புளியம்பாக்கத்தில் தங்கியிருந்த அனுவை கணவர் பாலமுருகன் சம்பவ நாளன்று சந்திக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் பாலமுருகன் தான்  வைத்திருந்த கத்தியால் அனுவை குத்தி கொலை செய்தார். பின்னர் பாலமுருகனும் தான் வைத்திருந்த அதே கத்தியால் கழுத்திலும், வயிற்றிலும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பாலமுருகன் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த அனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.