வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஏப்.18-இல் தாமல் வராகீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கெளரி அம்பாள் சமேத வராகீஸ்வரா் கோயிலில் வருகிற 18 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Updated On :15 ஏப்ரல் 2022, 6:45 pm

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கெளரி அம்பாள் சமேத வராகீஸ்வரா் கோயிலில் வருகிற 18 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கெளரி அம்பாள் உடனுறை வராகீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகம விதிப்படி திருப்பணிகள் நடைபெற்றதை தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 14 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. வருகிற 18- ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி மற்றும் தாமல் கிராம மக்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.