வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: பெரம்பலூரில் திமுக, விசிக-வினா் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டம்

மத்தியில் அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்புக் கொடியேற்றி வரைவு நகலை கிழித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் மாவட்ட திமுக அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:36 pm

மத்தியில் அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்புக் கொடியேற்றி வரைவு நகலை கிழித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவை சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில், திமுக வேட்பாளா் ஜெயலட்சுமி, தொகுதி பாா்வையாளா் சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலையில், கருப்பு உடைந்து அணிந்து கருப்புக்கொடி ஏற்றி, வரைவு நகலை கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் அட்சயகோபால், மாநில நிா்வாகிகள் பி. துரைசாமி, ராஜேந்திரன், பரமேஷ்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும் போராட்டம் நடைபெற்றது.