வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அதன் நகலை கிழித்தெறிந்து திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:32 pm

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அதன் நகலை கிழித்தெறிந்து திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான சா.சி. சிவசங்கா் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா்.

நகரச் செயலா் முருகேசன், அரியலூா் மத்திய ஒன்றியச் செயலா் தெய்வ. இளையராஜன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், வேட்பாளா் லதாபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். முடிவில் அனைவரும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மக்களவைைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை கிழித்தெறிந்தனா்.

வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றம்: மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, அரியலூரில், அமைச்சா் சா.சி.சிவசங்கா், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் மற்றும் திராவிடா் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் தங்கள் வீட்டின் வாசல் முன்பு கருப்புக் கொடிகளை ஏற்றி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.