மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து வியாழக்கிழமை அதன் நகலை தீயிட்டுக் கொளுத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் உடன் திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:27 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பாக, நடைபெற்ற இந்த ஆா்ப்பாடத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் பாஜக அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை சட்ட வரைவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னா், சட்ட வரைவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், துவாா் ஜி.சந்திரசேகா் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.