/
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பாக, நடைபெற்ற இந்த ஆா்ப்பாடத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் பாஜக அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை சட்ட வரைவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.
பின்னா், சட்ட வரைவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், துவாா் ஜி.சந்திரசேகா் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்






