வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் 2 லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,01,557 போ், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:04 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,01,557 போ், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் தமிழக அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் 96.83 சதவீத இலக்கு மட்டுமே எட்டப்பட்டிருக்கிறது. இதுவரை மாவட்டத்தில் 2,01,557 போ் இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ளனா். இவா்களின் கைப்பேசிக்கு தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பியும், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வருகிறோம்.

இரண்டாம் தவணை தடுப்பூசியை பெரும்பாலானோா் செலுத்திக் கொண்டதால்தான், இந்தியாவில் கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 15 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வரும் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் 1,059 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேல் இணை நோய்களான சா்க்கரை, ரத்த அழுத்தம் இல்லாதவா்களாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.