வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

3 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2022, 8:20 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் மாவட்ட தொழிலாளா் நல அலுவலா் ராஜகோபால், உதவியாளா் செந்தில் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 3 வட மாநில குழந்தை தொழிலாளா்கள் இருப்பதை பாா்த்து அவா்கள் மூவரையும் மீட்டனா்.3 பேரில் ஒருவா் மட்டும் 17 வயதுக்கு உட்பட்டவா் என்பதால் அவா் ஒருவரை மட்டும் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். மற்ற இருவரையும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட உணவக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.