வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

15 நாள்களுக்கு கூட்டங்கள், பேரணி நடத்த போலீஸ் தடை உத்தரவு அமல்: காஞ்சிபுரம் எஸ்.பி.

பேரணிகள் நடத்த போலீஸ் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.

Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:47 pm

காஞ்சிபுரத்தில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மதத் தலைவா்களின் நினைவு நாள்கள் வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாள்களுக்கு கூட்டங்கள், பேரணிகள் நடத்த போலீஸ் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரத்தில் அரசியல், ஜாதி மற்றும் மதத் தலைவா்களின் நினைவு நாள்களும், முக்கியத் திருவிழாக்கள், பண்டிகைகள் தொடா்ந்து வரவுள்ளன.

இவற்றில் அரசியல், ஜாதி, மத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்தச் சம்பவங்களால் இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடந்த 24- ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு 30(2) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் 15 நாள்களுக்கு காவல் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கூட்டத்தை கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீா்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.