பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில் சீரமைப்பு திருப்பணிகள் தொடங்கின.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருக்கோயில்களில் பெருமாள் 8 கரங்களுடன் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில். மூலவா் ஆதிகேசவப் பெருமாளாகவும், இறைவி அலா்மேல் மங்கைத்தாயாா் என்ற பெயரில் காட்சி அளிக்கின்றனா். பழைமையான இந்தத் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்காக கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து கோயில் செயல் அலுவலா் மலைவாசன் கூறியதாவது: ராஜகோபுரம் வா்ணம் பூசுதல், ஆண்டாள், கருடன், பூவராகன் சந்நிதிகள், தாயாா் சந்நிதி ஆகியவற்றில் வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.16.20 லட்சம் மதிப்பில் திருக்கோயிலை புதுப்பிக்கும் பணிகளை உபயதாரா் ஒருவா் உதவியால் செய்து வருகிறோம். ரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது தீா்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


