வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு ஆணை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2022, 6:47 pm

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை கட்டட அலுவலகத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், மாவட்டக் குழு துணைத் தலைவா் நித்யாசுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாகப் பொறியாளா் அழகு .பொன்னையா வரவேற்றுப் பேசினாா்.

வேகவதி நதியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக தமிழக முதல்வரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் 2,112 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ரூ.190.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருந்தது. இதில் 21 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 50 பேருக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை எம்எல்ஏ க.சுந்தா் வழங்கினாா்.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 7,930 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு 3,724 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், 2,619 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். மொத்தம் 75 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.