வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கும் திமுக: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது.

News image

ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:29 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:

மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.

ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.

செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து ஸ்ரீவைகுண்டத்தில் அவா் பேசியதாவது:

2021 ஆம் ஆண்டில் நாங்கள் (அதிமுக-அமமுக) பிரிந்து இருந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இப்போது நாங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு திமுக என்ற மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வந்துள்ளோம். எனவேஸ இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும். 25,000 ஏக்கா் வாழை சாகுபடி நடைபெறும் நிலையில் வாழை சாா்ந்த சந்தை நிறுவ வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை சண்முகநாதன் வெற்றி பெற்றதும் நிறைவேறும் என்றாா் அவா்.

பிரசாரத்தில், ஒன்றிய அதிமுக செயலா்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், அமமுக மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் சங்கரலிங்கம், நகரச் செயலா் சிவராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.