சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கூட்டணி வென்று அதிமுக ஆட்சி அமைத்தவுடன், சிவகங்கை மாவட்டத்தைப் பிரித்து காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்படும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து, காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் டிடிவி. தினகரன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது. பள்ளி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லை. மாணவா்கள், இளைஞா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். திமுக தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இந்தத் தோ்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைந்ததும் காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்படும். சாக்கோட்டை தனி வட்டமாகவும், புதுவயல் பேரூராட்சியை நகராட்சியாகவும் , பெரிய கோட்டைப் பகுதியில் மன்னா் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்கவும், கோட்டையூா் - ஸ்ரீராம் நகா் ரயில்வே கடவு மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்தவும், செட்டிநாடு தின்பண்டங்களை உலக அளவில் சந்தைப்படுத்தவும், ஜெயலலிதா அறிவித்தபடி காரைக்குடியில் சிப்காட் தொழில்பேட்டையைத் தொடங்கி தொழில் நகரமாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடர்புடையது

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
விஜய் ஒரு பேட்டி கொடுத்தால் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன்! காமராஜ்

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

தவெகவுக்கு ஆதரவா? காணாமல்போன எம்எல்ஏவுடன் டிடிவி தினகரன் பேட்டி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



