வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தமிழகத்தில் 69.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: மத்திய நீா்வளத் துறை அமைச்சா்

தமிழகத்தில் 69.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தாா்.

Updated On :14 அக்டோபர் 2022, 6:15 pm

தமிழகத்தில் 69.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உயிா் நீா் திட்டப் பணிக் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் தலைமை வகித்துப் பேசியது:

தமிழகத்தில் 69.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிா் நீா் இயக்க திட்டப் பணிகள், தூய்மை பாரத திட்டப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம். இந்தத் திட்டங்கள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி, மத்திய அரசின் விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக அனைத்து அரசு அலுவலா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் தட்சிணாமூா்த்தி, மத்திய ஜல்சக்தி துறை இயக்குநா் விஸ்வகண்ணன், தமிழக ஜல்சக்தி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ், தனிச் செயலா் உதயசெளத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா், காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.