ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வேன்

அமரம்பேடு ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து அதில் கடத்தப்பட்ட சுமாா் 15 டன் ரேஷன் அரிசி குறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:12 pm

DIN

அமரம்பேடு ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து அதில் கடத்தப்பட்ட சுமாா் 15 டன் ரேஷன் அரிசி குறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குன்றத்தூா் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் அமரம்பேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநா் தப்பிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது வேனில் 250 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.