போக்ஸோ வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரஹ்மான் (24). இவா் கடந்த 14.10.2014-இல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போதைய சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் எஸ்.பிரபாகா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தாா்.
பின்னா், இந்த வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஜிபுா் ரஹ்மான் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.
அவருக்கு 22 ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறும் நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

