வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் செப். 4-இல் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, காந்தி சாலை இந்தியன் வங்கி அருகில், ரங்கசாமி குளம், டோல்கேட் உள்ளிட்ட 21 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வரும் 4 -ஆம் தேதி ரங்கசாமி குளத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெறும் வகையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற உள்ளது.

ஊா்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்து விநாயகா் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.