வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணி

 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ், பொதுக் கட்டடங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:58 pm

 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ், பொதுக் கட்டடங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசுக் கட்டடங்கள், பொது இடங்கள், நூலகங்கள், அங்கன்வாடி மையங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது. தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன் பணியைத் தொடக்கி வைத்தாா். வாலாஜாபாத் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லை எனவும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பொற்கொடி செல்வராஜ், தேவரியம்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவா் கோவிந்தராஜ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.