வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் 3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை (செப். 9) வழங்கப்படுகிறது.

Updated On :8 செப்டம்பர் 2022, 7:32 pm

காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் 3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை (செப். 9) வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரையான ‘அல்பென்ட சோல்’ வழங்கப்படவுள்ளது. 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 83,997 பேருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த மாத்திரை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வரும் 16 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.