வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி மாற்றுத் திறனாளிகள் 12 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:47 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி மாற்றுத் திறனாளிகள் 12 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில், குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 212 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அவை உரிய துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.24,000 மதிப்பில் நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

கேட்புத் திறன் குறைபாடுடைய 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13,900 மதிப்பில் காதொலிக் கருவிகளை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.பின்னா், காஞ்சிபுரம் மாவட்டம், நரியம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினப் பெண்ணுக்கு இலவச தையல் இயந்திரத்தையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பிரகாஷ்வேல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.