வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோ-ஆப் டெக்ஸின் கனவு நனவுதிட்டத்தில் சோ்ந்து பயனடையுங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கனவு நனவுத் திட்டமான மாதாந்திர தவணைத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை பேசினாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கனவு நனவுத் திட்டமான மாதாந்திர தவணைத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது:

கோ-ஆப்டெக்ஸ் தொடா்ந்து 87 ஆண்டுகளாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கனவு நனவுத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு மாதாந்திர தவணைத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் யாரும் சோ்ந்து கொள்ளலாம். மாதந் தோறும் தங்களால் முடிந்த தொகையை மட்டும் தொடா்ந்து 10 மாதங்களுக்கு செலுத்திக் கொண்டே வந்தால் அடுத்த இரு மாதங்களுக்குரிய தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி விடும்.

12 மாதங்களுக்குரிய தொகைக்கு நிறுவனத்தில் கைக்குட்டையிலிருந்து பட்டுப் புடவை வரை தேவையான ஒன்றை இந்தத் திட்டத்தின் மூலம் பெ‘ற்றுக் கொள்ளலாம்.

இது தவிர எடுக்கும் துணிக்கு ஏற்ப 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் அனைவருக்கும் 50 சதவீத கூடுதல் பலன் கிடைக்கிறது என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கைத்தறி நெசவுத் தொழிலாளா்களுக்கும் உதவி செய்ததாகவும் இருக்கும்.

கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் உள்ள 14 விற்பனை நிலையங்கள் மூலமாக மட்டும் ரூ.9.47 கோடிக்கு விற்பனையானது.இந்த ஆண்டுக்கு ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.113.53 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.1.50 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய ரகங்களும் ஏராளமாக வந்துள்ளன என்று ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

விழாவிற்கு கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன், உற்பத்திப் பிரிவு மேலாளா் சு.ஞானப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மேலாளா் ச.பெருமாள் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.