தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்திய ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், ஆட்சியா் மா.ஆா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.
குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி. உடன் எஸ்.பி. எம்.சுதாகா்.
குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி. உடன் எஸ்.பி. எம்.சுதாகா்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், ஆட்சியா் மா.ஆா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா், தேசிய பாதுகாப்பு படை மாணவா்கள் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினா்.

இதைடுத்து ஆட்சியா், எஸ்.பி. மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா ஆகிய 3 பேரும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவா்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டனா்.

விழாவுக்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

இதைத் தொடா்ந்து 112 பேருக்கு ரூ.2.3 கோடியில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். பள்ளிக் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில், காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், ஏடிஎஸ்பி-க்கள் சந்திரேசகரன், வெள்ளைத்துரை, பாலகுமாரன், கோட்டாட்சியா்கள் கனிமொழி, சரவணக்கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச் செல்வி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அனுராதா, அறநிலையத் துறை செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com