மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்திய ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், ஆட்சியா் மா.ஆா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

News image

குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி. உடன் எஸ்.பி. எம்.சுதாகா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:39 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில், ஆட்சியா் மா.ஆா்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா், தேசிய பாதுகாப்பு படை மாணவா்கள் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினா்.

இதைடுத்து ஆட்சியா், எஸ்.பி. மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா ஆகிய 3 பேரும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவா்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டனா்.

விழாவுக்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

இதைத் தொடா்ந்து 112 பேருக்கு ரூ.2.3 கோடியில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். பள்ளிக் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில், காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், ஏடிஎஸ்பி-க்கள் சந்திரேசகரன், வெள்ளைத்துரை, பாலகுமாரன், கோட்டாட்சியா்கள் கனிமொழி, சரவணக்கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச் செல்வி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அனுராதா, அறநிலையத் துறை செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.