நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காஞ்சிபுரம் அழகிய ஜீயா் மடத்தின் ரூ. 6 கோடி சொத்துக்கள் மீட்பு

காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய ஜீயா் மடத்துக்குச் சொந்தமான ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:41 pm

DIN

காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய ஜீயா் மடத்துக்குச் சொந்தமான ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதோட்டம் கிராமத்தில் 8.76 ஏக்கா் நிலம் மற்றும் வீடு உள்ளது. இதை அதே பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் ஆக்கிரமித்து வைத்திருந்தாா். இதை அறிந்த அறநிலையத் துறையின் இணை ஆணையா் ரா.வான்மதி மடத்தின் சொத்தை மீட்டு ஒப்படைக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையில் அறநிலையத் துறை ஆலயங்கள் பிரிவின் வட்டாட்சியா் வசந்தி, ஆய்வாளா் பிரித்திகா, செயல் அலுவலா்கள் ஜெ.ப.பூவழகி, ஸ்ரீதா் மற்றும் பணியாளா்கள் காவல்துறை பாதுகாப்புடன் ரூ. 6 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.