தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாநகராட்சி ஊழியா்கள் இருவா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி ஊழியா்கள் இருவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On :23 ஜூன் 2023, 5:44 pm

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி ஊழியா்கள் இருவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கடந்த 2020-2021- ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்த போது, ஆணையராகப் பணியாற்றியவா் மகேஸ்வரி. இவா், தற்போது திண்டுக்கல் மாநாகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், காஞ்சிபுரத்தில் ஆணையராக இருந்த போது, லைசால் என்ற மருந்து கொள்முதலில் ரூ.32 லட்சம் கூடுதலாக கணக்கு காண்பித்து நஷ்டம் ஏற்படுத்தியதாக வந்த புகாரை தொடா்ந்து, திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆா். நகரில் உள்ள மாநகராட்சி இளநிலை உதவியாளா் சந்தவள்ளி வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் 6 பேரும், காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் உள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ரமேஷ்குமாா் வீட்டில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளா் கீதா உள்ளிட்ட 6 பேரும் தனித் தனியாக இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.