குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் பிரம்மோற்வத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை தோ் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் கட்டப்பட்ட நாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் நவக்கிரக தலங்களில் ராகு தலமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும் நிலையில், நிகழாண்டு விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வாகனங்களில் உற்சவா் நாகாகேஸ்வரா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிலையில், ஏழாம் நாளான சனிக்கிழமை திருத்தோ் விழா நடைபெற்றது. அமைச்சா் தா.மோ.அன்பரசன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் படித்து இழுத்தனா். அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் நாகேஸ்வரா் மாடவீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். குன்றத்துாா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனா்.
தொடர்புடையது

கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


