சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி சுவாதி பெருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா 14 நாள்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நாள்தோறும் அம்மன் கேடகம், அன்னம், கிளி , ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9.15 முதல் 10.15 மணி வரை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்
சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு தீா்த்தவாரியும், பக்தா்கள் சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு மலா் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விடாயாற்றி, வெள்ளி ஊஞ்சல் உத்ஸசவம் நடைபெறும். 12 -ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 13 -ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கரதம் புறப்பாடு நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பா.பாரதி, அறங்காவல் குழுத் தலைவா் சி.கண்ணப்பன், அறங்காவலா்கள், கண.சந்திரன் பூசாரி, ராணி சீனிவாசன், செயல்அலுவலா் கு.மாரிமுத்து ஆகியோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


