தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஜம்புமகரிஷி கோயிலில் அத்திமர வாராஹி சிலை விரைவில் பிரதிஷ்டை

ஜம்பு மகரிஷி கோயில் வளாகத்தில் விரைவில் அத்திமரத்தினால் செய்யப்பட் வராஹி சிலை பிரதிஷ்டை

News image

பிரதிஷ்டை செய்யப்பட உள்ள அத்திமர வாராஹி சிலை.

Updated On :10 டிசம்பர் 2024, 12:27 am IST

காஞ்சிபுரம், டிச.9: சின்ன காஞ்சிபுரம் ஜம்பு மகரிஷி கோயில் வளாகத்தில் விரைவில் அத்திமரத்தினால் செய்யப்பட் வராஹி சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழா குழுவின் நிறுவனா் அன்புச்செழியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன க்காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ளது ஜம்பு மகரிஷி கோயில். இந்த வளாகத்தில் 5 அடி உயரம், 4 அடி அகலத்தில் அத்திமரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ மகா வராஹி சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

அம்மன் திருக்கரங்களில் சங்கு சக்கரம், கலப்பை, தண்டம் ஆகியன அமைந்துள்ளவாறு சிலை வடிவமைக்கப்பட்டு தற்போது திருக்கழுகுன்றம் மலையடிவாரத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தாா்.