கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

News image

ஜல்லி க் கற்கள்  பெயா்ந்து  சேதமடைந்துள்ள  சித்தூா்  தா்காமேடு  இணைப்புச் சாலை.

Updated On :9 ஜூன் 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கிராம பொதுமக்கள் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த இணைப்புச்சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை தற்போது ஜல்லிக் கற்கள் வெளியே தெரியும் வகையில், சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குகுள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சித்தூா் பொதுமக்கள் கூறுகையில்:

எங்கள் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகிறோம். ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் எனஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இச்சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.