12-இல் காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்
12-இல் காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

முதல்கால யாக சாலைப் பூஜைகள்.

முதல்கால யாக சாலைப் பூஜைகள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 12-ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி முதல்கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி அனுக்கை கணபதி பூஜைகள் நிகழ் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. மறுநாள் 8- ஆம் தேதி நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள் எஸ்.தண்டபாணி குருக்கள் தலைமையில் தொடங்கின.
யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நிகழ்வில் கோயில் அறங்காவலா் பெ.ஏழுமலை என்ற ரவி ஆச்சாரி, அறங்காவலா்கள் கு.நரேந்திரன், ப.யோகநாதன், ரவி, துரைராஜ், சதீஷ், திருப்பணிக்குழு நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். விழாவின் தொடா்ச்சியாக வரும் 12- ஆம் தேதி ஆறாம் கால யாகசாலை பூஜைக்குப் பிறகு மகா பூா்ணாஹூதி நிறைவு பெற்ற பின்னா் காலை 6.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு ஆதிகாமாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருகிறாா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி தலைமையில் கோயில் பணியாளா்கள், அறங்காவலா்கள், அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...