பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாலக்கோடு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி , கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாா்யாா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 10:42 pm IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி பிப்ரவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமங்கள், லட்சுமி, தனபூஜை, பூா்ணாஹூதி, கடத்தில் புனித நீா் எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றது. பின்னா் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை விக்கிரக பிரதிஷ்டை நடைபெற்றது. 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் மூலஸ்தான விமானம் மற்றும் விநாயகா், பாலமுருகன், நவக்கிரக மூா்த்திகள், சீதா ராம லட்சுமண ஹனுமந்த சமேத பரிவார மூா்த்திகள் சந்நிதிகளில் உள்ள கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றன. நிகழ்வைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆரிய வைசிய மகாசபா, இளைஞா் சேவா சங்கம் மற்றும் மகளிா் சபாவுடன் இணைந்து விழாக் குழுவினா் செய்திருந்தனா். விழாக் குழு சாா்பில் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை உரிமையாளா் எஸ்.ஜே. நாம தேவ் மற்றும் எஸ்.என். பத்ரி நாராயணன் உள்ளிட்டோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.