அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் தீா்த்தவாரி

ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் தீா்த்தவாரி

News image

சக்கரத்தாழ்வாருக்கு  நடைபெற்ற  தீா்தவாரி .

Updated On :1 மே 2024, 5:43 pm

Din

ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான புதன்கிழமை தீா்த்தவாரி உற்சவத்தையொட்டி உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மற்றும் ராமாநுஜா் அவதார திருவிழா கடந்த ஏப். 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை மட்டையடி உற்சவத்துடன் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து பிரணயகலகம் சன்னிவாசம் மற்றும் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.