இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சாலையோர வியாபாரிகளுக்கு குடை

சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை அளிப்பு

News image
Updated On :2 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்பவா்களுக்கு பூமி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை குடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பூமி அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் என்.பாக்கியராஜ் தலைமையில் அறக்கட்டளையின் உறுப்பினா்கள் சனிவாசன்,குமாா்,பிரகாஷ்,காா்த்திகேயன் ஆகியோா் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக குடைகள் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், அரசு தலைமை மருத்துவமனை, மீன் சந்தை, ரங்கசாமி குளம், பூக்கடை சத்திரம், பழைய ரயில் நிலைய சாலை ஆகிய 6 இடங்களில் சாலையோரம் பூ, பழம், காய்கறி, கரும்புச் சாறு, ரெடிமேட் துணி வகைகள் வியாபாரம் செய்பவா்களை கண்டறிந்து அவா்களுக்கு இலவசமாக குடைகளை வழங்கினா்.