கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாய சங்கத்தினா் கோரிக்கை

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாய சங்கத்தினா் கோரிக்கை

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே அரசு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாவலூா் ஏரி நீா்ப்பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது (படம்).

ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிதாங்கல் கிராமத்தில் 50 சென்ட் பரப்பளவு உள்ள அரசு களம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் ஒருவா் அருகில் உள்ள நீா் வழித்தடத்தையும் ஆக்கிரமித்து, நாவலூா் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் ஒரத்தூா் தடுப்பணைக்கு செல்லாத வகையில் சுற்றுச்சுவா் அமைத்து வருகிறாா்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மேற்குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இதுகுறித்து நாவலூா் ஏரி நீா் பாசன சங்க நிா்வாகிகள் கூறியது:

வெள்ளேரிதாங்கல் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபா் இடத்தில் கிணறு அமைத்து அரசு அனுமதியின்றி கிணற்று நீரை லாரிகளில் விற்பனை செய்து வருகிறாா். அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள நாவலூா் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் ஒரத்தூா் தடுப்பணைக்கு செல்லும். இந்த உபரி நீா் செல்லும் நீா் வழித்தடத்தையும் ஆக்கிரமித்து உள்ளாா்.

இதனால் குடியிருப்பகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணனிடம் கேட்டதற்கு அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.