திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.

News image
கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்.
Updated On :9 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து 591 கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலி கருவியை அவா் வழங்கினாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் கீழ் மிட்டூா் ஊராட்சி பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காா், மோட்டாா் சைக்கிள், கனரக வாகனங்களில் எல்இடி விளக்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. .

வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பொதுமக்கள் அளித்த மனு: வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் தனது பணியை நோ்மையாகவும், வெளிப்படையாகவும் மக்கள் நலன் கருதி செய்து வந்தாா். இந்தநிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி அவருக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும்.