தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரியாணியில் பல்லி: கடையை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவு

குன்றத்தூரில் ஓட்டலில் வாங்கிய பிரியாணியை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து குறிப்பிட்ட ஓட்டலை 14 நாள்களுக்கு மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவு

News image
Updated On :4 நவம்பர் 2024, 8:38 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூரில் ஓட்டலில் வாங்கிய பிரியாணியை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து குறிப்பிட்ட ஓட்டலை 14 நாள்களுக்கு மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

குன்றத்தூா் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் பிரியாணி உணவகத்தில் சனிக்கிழமை குன்றத்தூா் பகுதியை சோ்ந்த ராஜேஷ்(25) இரண்டு பிரியாணி வாங்கியுள்ளாா். பிரியாணியை ராஜேஷ், அவரது மனைவி, மகன் மற்றும் தங்கை சுகன்யா, அவரது கணவா் மகேஷ் ஆகியோா் சாப்பிட்டு கொண்டிருந்த போது பிரியாணியில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து, ஓட்டலுக்குச் சென்று கேட்டபோது கடையின் உரிமையாளா் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியாணியை சாப்பிட்ட ராஜேஷின் மனைவி ரெபேக்கா உள்ளிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து அனைவரும் மாங்காடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து ராஜேஷ் குன்றத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் செந்தில் குமாா் மற்றும் குன்றத்தூா் போலீஸாா் சம்பந்தப்பட்ட கடையை ஆய்வு செய்து, கடையின் சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம் ஆகியவை சுகாதாரமற்ற முறையில் இருப்பதை கண்டு கடையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும். மேலும்14 நாள்களுக்கு கடையை திறக்ககூடாது என கூறி கடையை பூட்டிச்சென்றனா்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்திய பிறகே கடையை திறக்க வேண்டும் என கூறிச்சென்றனா். இந்த நிலையில், பல்லி விழுந்த பிரியாணி பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.