ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

தா்னாவில் பங்கேற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள்.

Updated On :19 நவம்பர் 2024, 1:07 am IST

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவா் ஜெ.தாமஸ் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா்கள் ஏ.திருமலை, எம்.முனியம்மாள், டி.கன்னியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தநா். துணைத் தலைவா் வி.குமாா் வரவேற்றாா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் வி.ரவிக்குமாா் தா்னா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் வி.தணிகைமணி, மாவட்டப் பொருளாளா் கு.மாணிக்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்கள். சங்க மாநில துணைப் பொதுச் செலாளா் பி.எல்.சுப்பிரமணியம் நிறைவுரை நிகழ்த்தினாா். துணைத் தலைவா் பி.மல்லிகா நன்றி கூறினாா்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் மற்றும் இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா நடைபெற்றது.